×

தேன்கனிக்கோட்டையில் எச்.எம்.,களுக்கு மீளாய்வு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, டிச.24:  தேன்கனிக்கோட்டையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடந்தது. தளி மற்றும் கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, நேற்று மீளாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ‘ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும். தீக்ஷா செயலி மூலம் மாணவ, மாணவிகளுக்கு வீடியோக்களை காண்பித்து, மாநில அளவில் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். அவற்றை குறுவள ஆசிரியர்கள் பார்வையிட்டு கண்காணிக்க வேண்டும். 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதால், தினமும் பாடவாரியாக தேர்வு வைத்து தயார்படுத்த வேண்டும்,’ என்றார். இக்கூட்டத்தில் பள்ளி ஆய்வாளர் சுரேஷ்பாபு, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கீதா, குமரவேல், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Review Meeting ,HMs ,
× RELATED பார்வையிழப்பு தடுப்பு சங்க மாதாந்திர ஆய்வு கூட்டம்