×

தக்கலை அருகே அரசு டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை, டிச.24: தக்கலை  அருகே அரசு டாக்டர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். தக்கலை அருகே பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர்  முருகன். இவரது மகன் பாலுகிருஷ்ணா (28). பளுகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  டாக்டராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. இவரது மனைவி  அகமதாபாத்தில் எம்டி படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறையானதால் பாலுகிருஷ்ணா வீட்டில் இருந்து வந்தார்.  இரவு வெகுநேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்  அடைந்த அவரது தந்தை முருகன் அறைக்கு சென்று பார்த்தார்.அப்போது  பாலுகிருஷ்ணா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதை பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். தொடர்ந்து தக்கலை காவல்  நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்தனர்.அதைத் தொடர்ந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து  வருகின்றனர்.குடும்ப பிரச்னை காரணமாக டாக்டர் பாலு கிருஷ்ணா தற்கொலை  செய்து கொண்டாரா? அல்லது பணி டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?  என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Government doctor ,suicide ,Thakkala ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...