கந்தர்வகோட்டை, டிச.24: கந்தர்வகோட்டை அருகே மேல கொத்தகம்பட்டியை சேர்ந்த மதியழகன் மகன் காந்த்(7). 2ம் வகுப்பு மாணவர். காந்தும், தந்தை மதியழகனும் நேற்று மருத்துவமனைக்கு பைக்கில் சென்றுவிட்டு புதுக்கோட்டை சாலையில் கடைவீதி அருகே வந்த போது லாரி பைக் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி காந்த் இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.