×

பாலக்காடு அருகே அனுமதியில்லாமல் செயல்படும் செங்கல் சூளைகள்

பாலக்காடு, டிச. 24: பாலக்காடு அடுத்த எலவஞ்சேரி ஊராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுகிறது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். எலவஞ்சேரி மலையோர அடிவாரத்தில் உள்ள 40 ஹெக்டர் நிலப்பரப்பில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதால்,  தென்னை மர தோப்புகள், நெல் வயல் புகையின் காரணமாக மாசுப்படிந்து வருகிறது. மேலும் மக்கள் சுவாச கோளாறு பிரச்னையில் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே கலெக்டர், தாசில்தார், ஊராட்சி உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தடையைமீறி  அதிகளவு செங்கல் சூளைகள் மலை அடிவாரம், ஆற்றங்கரையோரங்களில் செயல்படுவதாக விவசாயிகள், பொது மக்கள் புகார் அளித்துள்ளனர். எனவே அதிகாரிகள் செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palakkad ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது