×

வாடகை தகராறு வீட்டு உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

கோவை, டிச.24:கோவை அருகே வீட்டு வாடகை தகராறில் வீட்டு உரிமையாளரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த அருகம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். பெயிண்டர். இவர் வீட்டில் ரங்கநாதர்(45) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். வாடகை கொடுக்கும் தகராறில் ரங்கநாதர் நேற்று முன்தினம் தங்கவேலை அரிவாளால் வெட்டி தலைமறைவானார். படுகாயமடைந்த தங்கவேல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து ரங்கநாதரை தேடி வருகின்றனர்.

Tags : homeowner ,
× RELATED வீட்டு உரிமையாளரின் மனைவி குளிக்கும் போது படம்பிடித்த வாலிபர் கைது