×

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹25 லட்சம் மதிப்பிலான தங்கக்கை நன்கொடை; காசி மடாதிபதி வழங்கினார்

திருமலை, டிச.22: திருப்பதி ஏழுமலையானுக்கு ₹25 லட்சம் மதிப்பிலான தங்கக்கையை காசி மடாதிபதி நன்கொடையாக நேற்று வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காசி மடத்தின் பீடாதிபதி சமயந்திந்திர தீர்த்த சுவாமி நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் வரவேற்றனர். பின்னர், காசி மடத்தின் பீடாதிபதி சமயந்திந்திர தீர்த்த சுவாமி ₹25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்ட கையை எழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார்.

Tags : Tirupati Ezumalaimana ,Kazi Abbot ,
× RELATED திருப்பதி ஏழுமலையானுக்கு ஊரடங்கிலும்...