×

துணை செவிலியர் மீது புகார் புதுகையில் கொலை வழக்கில் கைதான முதியவருக்கு குண்டாஸ்

புதுக்கோட்டை. டிச. 22: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் தேனிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (52). இவர் மீது கணேஷ் நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு எஸ்பி அருண் ஷக்தி குமார் பரிந்துரைத்தார். இதையடுத்து, முருகேசனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவின் நகல் திருச்சி சிறையில் உள்ள முருகேசனுக்கு நேற்று மாலை வழங்கப்பட்டது.

Tags : murder ,Budapest ,
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு