×

புதுகை பஸ் நிலையத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 25 பேர் கைது

புதுக்கோட்டை, டிச.22: புதுகை புதிய பஸ் நிலையத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : hunger strike ,bus station ,Pudukkai ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்