×

குழந்தைகள் தின விழா

திருக்கழுக்குன்றம், டிச.22: காஞ்சிபுரம் மாவட்டம் ஓய்வுபெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பீம்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி  பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை காமாட்சி நன்றி கூறினார்.

Tags : Children's Day Festival ,
× RELATED அரியலூரில் குழந்தைகள் தின விழா நடைபயண...