×

டூவீலர் திருடிய வாலிபர் கைது

வாடிப்பட்டி, டிச. 22:  சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சின்னையா (53), ஜோதிடர். இவர், சம்பவத்தன்று சமயநல்லூர் பவர்ஹவுஸ் முன்பாக, தனது டூவீலரை நிறுத்திவிட்டு மதுரை சென்றார்.  திரும்பி வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இது குறித்து சமயநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், சமயநல்லூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தேனூர் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது  டூவீலரில் வந்த வாலிபரை மறித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால், காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டவர் மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த ஜெயமணி மகன் மகேந்திரன் (30) என்பதும். பவர்ஹவுஸ் முன்பு சின்னையாவின் டூவீலரை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.


Tags : Duveler ,
× RELATED நடுவழியில் பயணிகள் தவிப்பு பயணிகளை...