×

¬வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பள்ளிபாளையம், டிச.22: உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரபாளையம் தனியார்  கல்லூரியில் முன்னேற்பாடுகளை, நேற்று தேர்தல் பார்வையாளர் பிரபாகர் நேரில்  பார்வையிட்டார்.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில்  உள்ள 15 ஊராட்சிகள், 16 ஊராட்சி குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி  குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை, குமாரபாளையம் எஸ்எஸ்எம்  கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்காக கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை  தேர்தல் பார்வையாளர் பிரபாகர் நேரில் பார்வையிட்டார். அவர் வாக்கு  பெட்டிகள் வைக்கும் அறை, அங்கிருந்து வாக்கு எண்ணப்படும் மேஜைகளுக்கு  வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும் பாதைகள், பாதுகாப்பு  வசதிகள், குடிநீர் கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.  தொடர்ந்து பள்ளிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி  அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த  ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசண்முகம், வட்டார  வளர்ச்சி அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : Evidence Count Center ,
× RELATED 1 டன் ரேஷன் அரிசியை விற்க முயன்றவர் கைது