×

நீதிபதி நியமனத்தில் மதுரை வக்கீல்களுக்கு முக்கியத்துவம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேச்சு

மதுரை, டிச. 19: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, ஐகோர்ட் மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசியதாவது:  மதுரை நகரில்  உங்களுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் ஐகோர்ட்  கிளையில் பணியாற்றிய வக்கீல்கள் 6 பேர் மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,  நீதிபதிகள் நியமனத்தில் மதுரைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளீர்கள். இது குறித்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார் .  இந்த நிகழ்ச்சியில் நிர்வாக நீதிபதி எம். துரைச் சுவாமி வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி, வக்கீல்கள் துரைப்பாண்டியன், ராமமூர்த்தி, தியாகராஜன், ஆனந்தவள்ளி, இளங்கோ, மகேந்திர பதி, வெங்கடேசன், ராஜாராம், சாரங்கன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sahi ,lawyers ,judge ,Madurai ,AP ,
× RELATED ஜாமின் மனுக்கள் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை