காரைக்குடி, டிச.18: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேசனல் சிபிஎஸ்இ பள்ளியில் தபால்துறை சார்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. பள்ளி மூத்த முதல்வர் புவனாசங்கர் வரவேற்றார். பள்ளி தாளாளர் சத்யன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்யன் முன்னிலை வகித்தார். துணை மண்டல ஆய்வாளர் டென்னிஸ் தாசன் துவக்கிவைத்தார். இந்திய தபால் துறையின் வளர்ச்சி பற்றிய கட்டுரை எழுதினர். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.