×

சிறந்த தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூன் 7: சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆக.15அன்று சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18வயதிற்கு மேற்ப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் 5ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக இருத்தல் வேண்டும்.

தகுதியுடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா இரண்டு நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூன் 20ம் தேதி, மாலை 5மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறந்த தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,
× RELATED திருநங்கைகளுக்கு நாளை நலத்திட்ட உதவிகளை பெற சிறப்பு முகாம்