×

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு நாம் தமிழர் கட்சி மனு நிராகரிப்பு

தரங்கம்பாடி, டிச.18: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 30 ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள், 57 ஊராட்சி தலைவர்கள், மற்றும் 456 ஊராட்சி வார்டுகளுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அவற்றிற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினத்தோடு முடிந்து, நேற்று வேட்புமனு பிரிசீலனை நடந்தது. 3 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்பிற்கும் 22 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 9வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நாகலெட்சுமி என்பவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையாரில் இருப்பதாகவும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அவர் பெயர் இல்லை என்பதாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கபட்டது.

Tags : Tamilnadu ,
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...