×

லைட்ஹவுஸ்- திருமாநிலையூர் இடையே உள்ள பாலத்தில் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், டிச. 18: அமராவதி பாலத்தில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்ய வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் லைட்ஹவுஸ், திருமாநிலையூரை இணைக்கும் சாலை பாலம் உள்ளது. அமராவதி குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால் வாகனங்கள் செல்ல செல்ல பள்ளங்களில் உள்ள விரிசல் அதிமாகிக்கொண்டே போகிறது.

இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது தடு£ற்றம் அடைகின்றன. சிறிய பள்ளமாக இருக்கும்போதே மராமத்து வேலைகளை செய்ய வேண்டும்.ஆனால் அதைசெய்யாததால் மெகா பள்ளங்களாக மாறி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த இடங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,bridge ,Thirumanthiyur ,Lighthouse ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...