×

தாந்தோணிமலை பகுதியில் வடிகால் பணி மீண்டும் துவங்கி விரைந்து முடிக்கப்படுமா?

கரூர், டிச. 17: கரூர் தாந்தோணிமலை ராயனூர் இடையே ஏராளமான நகர்ப்பகுதிகள் உள்ளன. இந்த நகர்ப்பகுதி சாக்கடைகள் அனைத்தும் ஒரே சாக்கடையில கலந்து மில்கேட் வரை செல்லும் வகையில் சில மாதங்களாக சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது சில நாட்களாக இந்த பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் பாதைகள் துண்டிக்கப்பட்டு மாற்று வழியில் செல்லும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட பகுதியில் சாக்கடை கழிவுகளும் தேங்கியும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வந்த சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை உடனடியாக துவங்கி விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நொய்யல் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு