×

சூளகிரியில் 197 பேர் மனு தாக்கல்

சூளகிரி, டிச.13: சூளகிரி வட்டாரத்தில் 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், 381 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 25 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 9ம் தேதி முதல் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இதில் நேற்று சென்னபள்ளி ஊராட்சி மன்ற தலைவிக்காக பதவிக்கு பயில்கிராமத்தை சேர்ந்த முன்னாள் சென்னபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் (அதிமுக மாவட்ட மீனவர் அணி செல்வம் மனைவி சரஸ்வதி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் 2 ஆயிரத்திற்கும் மக்கள் திரண்டு வந்னர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று மட்டும் 197 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Tags :
× RELATED கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது