கோவில்பட்டி, டிச.12: காந்திய சிந்தனை தேர்வில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கலட்சுமி மாநில அளவில் 2வது இடம் வென்றார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காந்தி பயிற்சி மையம், ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காந்திய சிந்தனை தேர்வை நடத்தி வருகிறது. இதன்படி நடப்பாண்டிற்கான காந்திய சிந்தனை தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி தங்கலட்சுமி மாநில அளவில் 2வது இடம் வென்றார். சாதனை படைத்த மாணவிக்கு சென்னையில் நடந்த விழாவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பரிசு வழங்கிப் பாராட்டினார். இதைத்தொடர்ந்து பள்ளித் தலைவர் எவரெஸ்ட் ராமச்சந்திரன், பள்ளிச் செயலாளர் ரதிமுனி ஸ்ரீ, தலைமையாசிரியர் சாந்தினி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.