×

ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

பூந்தமல்லி, டிச.11:  போரூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மவுண்ட் - பூந்தமல்லி சாலை, போரூர் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சி வங்கியின் தலைமையகத்துக்கு தெரியவர, இதுபற்றி போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனே, சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஏடிஎம் மையத்தில் பார்வையிட்டபோது, இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்தனர்.  அம்பத்தூர், கள்ளிக் குப்பம், புதூர் பகுதியை சேர்ந்த யோகேல் ராஜா (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : robbery ,ATM ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...