×

புத்தக கண்காட்சி துவக்கம்

அருப்புக்கோட்டை, டிச.10: நேஷனல் புக்  டிரஸ்ட் விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு கிட்ஸ் கார்னர் நியூ செஞ்சுரி  புத்தக நிறுவனம் சார்பில் அருப்புக்கோட்டையில் 34வது தேசிய புத்தக  கண்காட்சி நடத்தப்பட்டது. முன்னாள் திமுக எம்எல்ஏ விஜயகுமார்  கண்காட்சியை திறந்து வைத்தார்.  தினேஷ்குமார் முதல் விற்பனையை தொடங்கி  வைத்தார். நிகழ்ச்சியில்  மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர்  கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், ஜெயராமன்,  வேலவன், பாண்டியராஜன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  இந்த புத்தக கண்காட்சி வருகிற 15ம் தேதி வரை  நடைபெறுகிறது.

Tags : Book Fair Launch ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை