மானாமதுரை, டிச. 10: மானாமதுரை குலாலர் தெருவில் உள்ள பொன்னாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமாவார சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாயாண்டி சாமி பஜனைக்குழு சார்பாக பஜனை நடைபெற்றது. பின்னர் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது.