×

எருமாடு அருகே புளியங்குன்னு ஆற்றில் மணல் கடத்தல்

பந்தலூர், டிச. 10: பந்தலூர் அருகே எருமாடு புளியங்குன்னு ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து வருவாய்துறை விசாரணை நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு புளியங்குன்னு ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேரம்பாடி வருவாய் ஆய்வாளர் காமு மற்றும் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி இல்லாமல் ஆற்றில் மணல் எடுத்து மூட்டைகளாக்கி கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும் ஆற்றுப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த 20 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Puliyankunnu River ,Erumadu ,
× RELATED பந்தலூர் அருகே குடிமகன்களின் கூடாரமாக மாறிய சமுதாயக் கூடம்