×

கோவிலில் சங்காபிஷேகம்


தேவதானப்பட்டி, டிச.4: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் உள்ள முனையடுவநாயனார் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாலை கோவிலில் 108 சங்குகள் வைத்து கணபதி ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் அதிகாரநந்தி மற்றும் காசிவிஸ்வநாதருக்கு மஞ்சள்பொடி,  மாபொடி, திருமஞ்சனதிரவியம், பால், தயிர், தேன், பழங்கள், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் மற்றும் 108 சங்கு தீர்த்தங்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Tags :
× RELATED கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு