மேலூர், டிச. 4: மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழித்தோங்கவும் சிறப்பு பிராத்தனைகளுடன் மேலூர் அருகே உள்ள சிவாலயத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கம், சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்கபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கரலிங்க சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளுடன் கூடிய ஆராதனைகளும் நடைபெற்றது.மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ரமேஷ் அய்யர் மற்றும் சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.