உடன்குடி,டிச. 4: பரமன்குறிச்சி முருகேசபுரம் அபர்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 22வதுஆண்டு விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் டாக்டர் பிச்சைமணி தலைமை வகித்தார். முதல்வர் இம்மானுவேல் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி செயலர் கிறிஸ்டினால் கீதாராஜ்குமார் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு காசோலை மற்றும் பரிசுகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் தூத்துக்குடி சிறப்பு சமூக நலத்துறை வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷெலின்ஜார்ஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணைமுதல்வர் மேரிபிரபா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.