×

முன்னேற்பாடுகளும் விறுவிறுப்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்

வேதாரண்யம், டிச.3:வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியமா முனிவருக்கு திருமணகோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்த வரலாற்று சிறப்புடைய வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் 1008 சங்குகள் வைத்து சிறப்புபூஜை நடைபெற்றது.பின்புபுனிதநீர் அடங்கிய கடங்கள், சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு முன்னதாக உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.வேதாரண்யம் விளக்கழகு என்ற பெருமைக்கேற்ப சுவாமி சன்னதியில் உள்ள சரவிளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு சன்னதி ஒளிமயமாக காட்சியளித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


Tags : Sangu Abhishekam ,Vedaranyeswarar Temple ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில்...