×

மண் சரிவில் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

குன்னூர், டிச.3:குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் மண் சரிவில் சிக்கிய பெண்ணை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் மற்றும் பர்லியாறு பகுதிகளில்  6 இடங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள், மண் குவியல்கள் பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜேசிபி வாகனங்கள் மூலம் நிலச்சரிவுகளை அகற்றி வருகின்றனர்.  நேற்று குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஜூலியட் (54) என்ற பெண் குன்னூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட திடீர்  மண் சரிவில் அவர் சிக்கி கொண்டார்.  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து மண் சரிவில் சிக்கிய ஜூலியட்டை உயிருடன் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ