×

வீடுகள் இடிந்து 17 பேர் பலி நா.கார்த்திக் எம்.எல்.ஏ. இரங்கல்

கோவை, டிச. 3:  மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ. இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர், கண்ணப்பன் லே அவுட் என்ற பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற  செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Kartik MLA ,houses ,
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்