×

மண் சரிவு பகுதியில் பயணம் வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூர், டிச.1: குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அவ்வப்போது ஏற்படும் மண் சரிவால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே மலைப்பாதையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.   குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். மேலும் விழுந்த பாறைகள் சாலைகளில் அகற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்த  வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,mud slope area ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...