×

பள்ளியில் ‘தாத்தா-பாட்டி’ தினம்

மதுரை, டிச.1:  மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ‘நரை கண்ட கேசமாம், வரி கண்ட தேகமாம்’ தலைப்பில் ‘தாத்தா-பாட்டி’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஜெரால்டு வரவேற்றார். ஓய்வு பெற்ற மூத்த இன்ஜினியர் சுப்புராஜ் மற்றும் ஜெகதாம்பாள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தாத்தாக்கள், பாட்டிகள் சிறப்புகள் குறித்து பேசினர்.  தலைமையாசிரியை அமுதா ஒருங்கிணைத்தார். மாணவ, மாணவிகளது தாத்தாக்கள், பாட்டிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் பல்வேறு  பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். ஆசிரியர் தீபக் நன்றி கூறினார்.

Tags : Grandparents ,School ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா