×

கிழக்கு மாவட்ட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல்

கிருஷ்ணகிரி, நவ.29: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி மன்றப் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம், நேர்காணல் நாளை (30ம் தேதி) முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, நாளை (30ம் தேதி) காலை 10 மணிக்கு, போச்சம்பள்ளி மாரியப்ப கவுண்டர் திருமண மண்டபத்தில் ஊத்தங்கரை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கும், 11 மணிக்கு ஊத்தங்கரை பேரூருக்கும், 12 மணிக்கு மத்தூர் ஒன்றியத்திற்கும், 2 மணிக்கு போச்சம்பள்ளி ஒன்றியத்திற்கும், மாலை 3.30 மணிக்கு நாகரசம்பட்டி பேரூருக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. வருகிற டிசம்பர் 1ம் தேதி, கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி நகரத்திற்கும், 11 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்திற்கும், 12.30 மணிக்கு கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியத்திற்கும், பிற்பகல் 2 மணிக்கு காவேரிப்பட்டணம் பேரூருக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கும் நேர்காணல் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு பர்கூர் பேரூருக்கும், மாலை 4 மணிக்கு பர்கூர் ஒன்றியத்திற்கும் நேர்காணல் நடைபெறுகிறது. எனவே, விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரும், தவறாமல் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : petitioners ,Eastern District ,DMK ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...