×

தேன்கனிக்கோட்டையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பகுதியில், தீவிர டெங்கு தடுப்பு பணிகள் நேற்று நடைபெற்றது.  கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ், கெலமங்கலம் வட்டார மருத்துவர் மோகன் முன்னிலையில், ஏடிஎஸ் மற்றும் டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணி, கொசு மருந்து அடித்தல், பழைய டயர்களை கண்டறிந்து அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து, சுகாதாரமாக பராமரிக்காத 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்து. இந்த பணியில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.



Tags :
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்