×

திருவண்ணாமலையில் மாணவி பலாத்கார வழக்கில் நைஜீரியா வாலிபர் கைது

திருவண்ணாமலை, நவ.29: திருவண்ணாமலையில் மாணவி பலாத்கார வழக்கில் நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்லத்துரை கிருஷ்ணகிரிக்கு தப்பிச்சென்றார்.இந்நிலையில், மாணவியின் பாட்டிக்கு அறிமுகமான கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான நைஜீரியா நாட்டை சேர்ந்த விக்கிபலிப்(25) என்பவர் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அவரும் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்லத்துரையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ைகது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த விக்கிபிலிப் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nigeria ,student ,Thiruvannamalai ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்