×

அரவக்குறிச்சி அருகே ஆப்பிள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர், கிளீனர் தப்பினர்

அரவக்குறிச்சி நவ. 28: அரவக்குறிச்சி சீத்தப்பட்டி காலனி அருகே ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் கிளீனர் இருவரும் காயத்துடன் தப்பித்தனர்,ஜம்மு காஷ்மீரில் இருந்து ஒரு லாரியில் 20 டன் ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்கள் ஏற்றிக்கொண்டு மதுரை ஒட்டன்சத்திரம் பகுதி வியாபாரிகளுக்கு விநியோகிப்பதற்காக வந்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த சீத்தப்பட்டி காலனி அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. டிரைவர் கிளீனர் இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.


Tags : cleaner ,Aravakurichi ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...