×

இளம்பெண் கொலையில் உறவினர்களிடம் விசாரணை எட்டூர் கிராம கமிட்டியினர் அறிவிப்பு

திருமங்கலம், நவ.27: திருமங்கலம் அருகே இளம்பெண்ணை தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவத்தில் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள சின்னஉலகாணியை சேர்ந்தவர் தனுஷ்கொடி. இவரது மகள் முத்துமாரியை நேற்று முன்தினம் சின்னஉலகாணி கண்மாய்கரையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முத்துமாரி இரண்டு திருமணம் செய்து கொண்டவர். நாகமலையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்து விவாகரத்து பெற்று, அரசபட்டியை சேர்ந்த பெரியகருப்பனை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் கண்மாய்கரையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ettore village ,committee ,relatives ,murder ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு