×

திருமலைக்கேணியில் சர்வ அமாவாசை

நத்தம், நவ. 27: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சர்வ அமாவாசை தின விழா நேற்று நடந்தது.
இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அருகிலுள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் கனமழை வேண்டி கூட்டு வழிபாடும், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்