அரியலூர், நவ. 27: ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் பங்கேற்கின்றனர். எனவே காஸ் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது புகார், ஆலோசனைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.