×

கரூர் செங்குந்தபுரம் 12வது குறுக்கு தெருவில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், நவ. 27: குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் செங்குந்தபுரம் 12வது குறுக்கு தெரு பகுதி ஜவுளி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது, பிற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. ஜல்லிகற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். இந்த சாலையில் சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என ஓட்டுனர்கள் தெரிவித்தனர். சாலையை செப்பனிட பலமுறை கோரியும் கண்டுகொள்ளப்படாத கோரிக்கையாகவே இருக்கிறது. துரிதமாக சாலையை செப்பனிட வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,ditch road ,Karur ,12th Cross Street ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...