×

மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை

பொன்னேரி, நவ.27:  மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் அண்ணாநகரில் வசிப்பவர் ராஜேஷ் (33). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் கொள்ளை அடித்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபோல் இதே பகுதியில் வசித்துவரும் தனியார் கம்பெனி ஊழியர் ஜெயவேல், நேற்று முன்தினம் குடும்பத்துடன் தனது அண்ணன் வீட்டில் தங்கிவிட்டு,  அங்கிருந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், 8 ஆயிரம் கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதேபோன்று அதே பகுதியில் வசித்துவரும் முகுந்தன் என்பவரது வீட்டிலும்  கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மீஞ்சூர் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : houses ,Meenkoor ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்