×

துறைமங்கலம் சொக்கநாத கோயிலில் 108 சங்காபிஷேகம்

பெரம்பலூர், நவ. 26: துறைமங்கலம் சொக்கநாத கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் சொக்கநாத கோயில் உள்ளது. மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமையன்று சோமவார பூஜை நடைபெறுவது வழக்கம். அதைதொடர்ந்து நடப்பாண்டு கார்த்திகை மாதம் திங்கட்கிழமையான நேற்று சிவபெருமானுக்கு சிறப்பு சங்காபிஷேக விழா நடந்தது. இதில் 108 சங்குகளை லிங்க வடிவில் வைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதியுடன் சிறப்பு வேள்வி யாகம் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து சொக்கநாத பெருமானுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, நான்கு ரோடு, தண்ணீர்பந்தல், எளம்பலூர், நெடுவாசல், சிறுவாச்சூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Porthmangalam Sokkanath Temple ,
× RELATED பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு