×

அரவக்குறிச்சியில் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 3 நாட்கள் தொடர் சொற்பொழிவு

அரவக்குறிச்சி, நவ. 26: அரவக்குறிச்சியில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு தொடர் சொற்பொழிவு 3 நாட்கள் நடைபெற்றது. அரவக்குறிச்சி பெரியகடைவீதி திடலில் நடைபெற்ற இந்த மூன்று நாள் தொடர் சொற்பொழிவிற்கு அரவக்குறிச்சி சின்ன பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். பெரிய பள்ளி இமாம் முஹம்மது இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார். சென்னை முகம்மது சலீம் சிராஜி நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரையாற்றினார்.

இரண்டாம் நாள் ஆனைமலை புது ஜமாத் பள்ளிவாசல் இமாம் முஹம்மது தாஹா யாசின் சிறப்புரையாற்றினார். மூன்றாம் நாள் கோவை தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் இமாம் அப்துல்மாலிக் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு பற்றி எடுத்துரைத்தார். மூன்று நாட்களும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்கும் மதரசா மாணவர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : lecture ,Aravukurichi ,Prophet Muhammad ,
× RELATED தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம்...