×

திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்: 5 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், நவ. 26: திருப்புத்தூர் அருகே, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிப்பந்தயம் நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புத்தூர் ஒன்றியம், திருக்கோஷ்டியூர் அருகே உள்ள குண்டேந்தல்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப்படை காவலராக சுப்பிரமணியனின் நினைவாக சிவகங்கை-திருப்புத்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரட்டை மாட்டு வண்டிப்பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியில் பெரிய மாடு பிரிவில் 24 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 25 ஜோடிகளும் கலந்து கொண்டன. இந்த பந்தயம் அரசு அனுமதி பெறாமல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தி.வைரவன்பட்டி வி.ஏ.ஓ.,வசந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில், குண்டேந்தல்பட்டியைச் சேர்ந்த வல்லத்தரசு மகன் புகழரசு (45), மேலையான்பட்டியைச் சேர்ந்த சோமன் மகன் செந்தில் முருகன் (32), பிராமணம்பட்டியைச் சேர்ந்த பொன்னையா மகன் ராமசாமி (59), ஆறுமுகம் மகன் ரவிச்சந்திரன் (45), தேரப்பன் மகன் பால்ராஜ் (45) ஆகிய 5 பேர் மீது நேற்று திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,Thiruputhur ,
× RELATED சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால்...