திருச்செங்கோடு, நவ.26: திருச்செங்கோட்டில் நடந்த துளிர் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற 8 குழுவினர், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மக்கள் பாதை இணைந்து, திருச்செங்கோடு அருகே உள்ள சண்முகா கல்லூரியில், மாவட்ட அளவிலான துளிர் வினாடி- வினா போட்டியை நடத்தின. இதில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சண்முகா கல்லூரியின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரபாகர், வினாடி- வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் கண்ணன், துணைத்தலைவர்கள் மணிராஜா, கைலாசம், பொருளாளர் ரகோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற 8 குழுவினர், வரும் 30ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான துளிர் வினாடி-வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.