×

தேன்கனிக்கோட்டை அருகே மரம் வெட்டி கடத்திய 2 பேர் கோர்ட்டில் சரண்

தேன்கனிக்கோட்டை, நவ.26:  தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் வேங்கை மரம் கடத்திய வழக்கில், 2 பேர் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வனக்குழுவினர் கடந்த 16ம் தேதி, தேன்கனிக்கோட்டை வனச்சரகம் மாரண்டள்ளி காப்புகாடு, கல்லுப்பள்ளி பீட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேங்கை மரங்களை வெட்டி கடத்திய பாலக்கோடு அகரம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் கணேசன்(36), கண்ணன் மகன் பாபு(35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பெருமாள் மகன் முரளி, முனியப்பன் மகன் பெரியசாமி, வரதன் மகன் கணேசன், தேவராஜ் மகன் பச்சப்பன் ஆகிய 4 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் முரளி, பச்சியப்பன் ஆகியோர், நேற்று தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் செந்தில்பாபு முன்பு சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இருவரையும் வனத்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Tags : persons ,Thenkanikottai ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...