×

பாகலூர் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த வேண்டும்

ஓசூர், நவ.26: ஓசூர் அருகே பாகலூர் கிராமத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் நகரில் இருந்து 12 கி.மீ தொலைவில், பாகலூர் கிராமம் உள்ளது. ஓசூர் தாலுகாவில் பெரிய கிராமமான பாகலூரில், மேல்நிலைப்பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகலூர் அரசு மருத்துவமனைகளில், இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சாலை விபத்து மற்றும் பிரசவம் போன்ற அவசர காலங்களில், 108 ஆம்புலன்ஸ் ஓசூரிலிருந்து வரவேண்டி உள்ளது. ஆம்புலன்ஸ்கள் ஓசூரிலிருந்து வர நீண்ட நேரமாவதால், விபத்துகளில் சிக்குபவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. எனவே, பாகலூர் பகுதியில் விபத்து போன்ற அவசர நிகழ்வுகளுக்கு உதவும் வகையில், மாவட்ட நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Bagalur ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு