×

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு குளிர்கால ஆடைகள்

ஊத்தங்கரை, நவ.26: ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குளிர்கால பாதுகாப்பு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். வட்டார வள மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள அரசு பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, குளிர்கால பாதுகாப்பு ஆடைகளை மருத்துவர்கள் பாலாஜி விஸ்வநாத், சுபத்ரா மற்றும் சாந்தி குணசேகரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில், செந்தில்குமார், கீதா, செங்குட்டுவன், மல்லிகா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முருகன், ஆசிரியர் சக்தி, உமா, மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு ஆசிரியர்கள் சுரேஷ், கவிதா, பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

Tags :
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்