×

தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

பாலக்கோடு, நவ.26: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பெங்களூரு- சேலம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் உடல் சிதைந்து கிடப்பதாக, மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஓசூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த ரயில்வே போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : corpse recovery ,
× RELATED மணிப்பூரில் விறகு சேகரிக்க சென்ற 3...