×

சென்னையில் இன்று நடக்க இருந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் ஆணையர் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

நாகர்கோவில், நவ.26: ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளி கல்வி ஆணையர் சென்னையில் இன்று (26ம் தேதி) நடத்த இருந்த கலந்துரையாடல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறைக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவரது தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சு பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பணியாளர் நலன் மற்றும் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்ட அரங்கில் நடைபெற இருந்த இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் மூன்று பொறுப்பாளர்களும், பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கங்களின் சார்பில் இரண்டு பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்கின்ற பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து பூர்வமாக கூட்டம் தொடங்கும் முன்னதாக வழங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த கூட்டம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல் வெளியிட்டுள்ளார். நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அனுப்பி வைத்துள்ள குறுந்தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags : Advisor meeting ,teachers union executives ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது