×

கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்திற்கு திரண்ட லெனினிஸ்ட் கட்சியினர் போலீசார் பேச்சுவார்த்தை

நாகர்கோவில், நவ.26: ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் பகுதியில் வீட்டில் குடியிருந்து வந்த பெண்ணை அடித்து விரட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) சார்பில், நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்த முயன்றனர்.

அவர்களிடம் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரித்தனர். மேலும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags : parties ,protest ,Leninist ,office ,collector ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!